BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 18 August 2013

திருச்சியில் மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை?



திருச்சியில் ரயில் தண்டவாளத்தில் 13 வயதான எட்டாம் வகுப்பு மாணவியான தௌபிஃக் சுல்தானா சிதறி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரை பாலியல் பலாத்காரம் செய்து தண்டவாளத்தில் உடலைப் போட்டிருக்கலாம் என்று பரபரப்புக் குற்றச்சாட்டுகளை அவர்களை சேர்ந்தவர்கள் கூறுவதால் பரபரப்பு நிலவுகிறது இது குறித்து சற்றுமுன் செய்திகள் வாசகர் Mohamed Abbas நமக்கு எழுதிய கடிதம் அப்படியே இங்கு தரப்படுகிறது

தமிழக அரசே தமிழக அரசே குற்றவாளிகளை உடனே கைது செய்

திருச்சி மாநகரின் மத்திய பகுதியில் மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள ஒரு பள்ளியில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டு உள்ளார் எட்டாம் வகுப்பு மாணவியான தௌபிஃக் சுல்தானா என்கிற மாணவி…

கற்பழிக்கப்பட்ட மாணவியில் உடலை சிதைத்த (இடுப்புக்கு கீழ் பகுதியை அறுத்து எறிந்து உள்ளனர்..) அந்த காமுகர்களின் கூட்டம் அந்த பெண்ணின் உடலை ரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றுள்ளனர்.. உள்ளூர் காவல் துறையும் ரயில்வே போலிஸூம் சேர்ந்துக் கொண்டு இந்த கொலையை தற்கொலையாக மாற்ற முயற்ச்சித்து வருகின்றனர்… உடல் அனைத்தும் துண்டு துண்டாக ஆன போதும் அவரின் ஆடையில் ரத்த கறை இல்லாமல் இருக்கின்றது… இது திட்டமிட்ட படுகொலை என்பதற்கு இதெல்லாம் ஆதாரம்… ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் மௌனம் காத்து வருகின்றனர்… உண்மையை வெளிக்கொணர வேண்டிய காவல்துறை தற்கொலையாக சித்தரிக்க முயற்சிக்கின்றன…

இந்த அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையினை சேர்ந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இது போன்ற நடவடிக்கையை தான் இவர்கள் எடுப்பார்களா? என்பது சந்தேகமாக உள்ளது… கயவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.. அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.. இது போன்ற செயல்கள் டெல்லி மாணவி, விந்தியா, புதுச்சேரி கல்லூரி மாணவி என தொடர்கதையாக நடந்த்து வருகின்றன… இதற்கு முடிவு கட்ட வேண்டியது கட்டாய கடமை…

டெல்லியில் ஓரு மாணவி கற்பழிக்கப்பட்டதற்க்கு ஒட்டு மொத்த இந்தியாவும் ஒருமித்த ஒரே குரலில் அதர்மத்திற்கு எதிராக ஓரு அணி திரண்டு குற்றவாளிகளுக்கு தண்டன குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே பிடிக்கவும் போராட்டம் நாடு முழவதும் நடந்தது குற்றவாளிகள் உடனே பிடிக்க பட்டனர் எங்கோ ஓரு மாநிலத்தில் நடத்த ஓரு குற்ற செயலுக்கு ஒன்று கூடிய நாம் தமிழ் நாட்டு மக்கள் சொந்த மாநிலத்தில் ஓரு இளம் பெண் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாள் . இதை ஓரு ஊடகமோ ஓரு தொலைக்காட்சியோ மறந்தது ஏனோ ..இந்த அதர்மத்திற்க்கு ஏனோ சமுக ஆர்வலர்களும் குரல் கொடுக்காமல் மௌனமாய்வுள்ளர்கள் ?

தமிழக மக்களே ஒன்று கூடுவோம் அதர்மத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் குற்றத்தில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க போரடுவோம் இந்த கொடூரமான கொலையை கண்டிக்க மறந்த பத்திரிகை மற்றும் தொலைகாட்ச்சிகளை கண்டிப்போம்

டெல்லி பெண்ணுக்கு ஓரு நியாயம் தமிழ்நாட்டு பெண்ணுக்கு ஓரு நியாயமா ? தவ்பிக் சுல்தானா இவளும் பெண்தானே வாருங்கள் தமிழ் மக்களே அதர்மத்தை ஓரு அணி நின்று எதிர்ப்போம்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media