BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 8 August 2013

எஸ்.ஏ.சி மற்றும் விஜய்க்கு முதல்வரை பார்க்க அனுமதி மறுப்பு!

தலைவா படம் திரையிடப்படும் திரையரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து சென்னை மற்றும் செங்கல்பட்டு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனம் அப்படத்தை திரையிட முடியாது என அறிவித்தது.

தமிழக சி.ஐ.டி போலீஸாரும் தங்கள் பங்குக்கு தலைவா படம் வெளியிட்டு திரையரங்கில் எதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு திரையரங்கு உரிமையாளர்களே பொறுப்பு என தனிதனியாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் தலைவா படத்தை வெளியிட தமிழக அரசின் ஆதரவு கோரி நடிகர் விஜயும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் முதல்வரை சந்திக்க விரும்பி அனுமதி கேட்டிருந்தனர், சற்றுமுன் வந்த தகவலின் படி அவர்களுக்கு அனுமதி மறுக்கபட்டதாக தெரிகிறது.

சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்ற கொடா நாட்டிலிருந்து முதல்வர் ஜெயலலிதா வருவார் என்று எதிர்பார்த்தே இந்த அனுமதி கோரியிருந்தனர், ஆனால் அரசியல் வட்டாரத்தில் இம்முறை எத்தனை அமைச்சர்கள் மாற்ற படபோகிறார்களோ என்ற அச்சத்தில் இருக்கிறோம் இவர்கள் சினிமா ரிலீஸ் பண்ண அனுமதி கேட்டு காமெடி பண்றாங்கன்னு என பேசி கொண்டதாக தகவல்!

# அணிலுக்கே ஆப்பா!

இங்கே இருக்கும் படம் மிக பழமையானது என சொல்ல கடமைபட்டுள்ளோம்




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media