BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 8 August 2013

இராணுவத்தில் வீரர்கள் சேருவதே சாவதற்காகத்தான், இதில் என்ன ஸ்பெசல் - உளறிய பீகார் அமைச்சர்

இராணுவத்தில் வீரர்கள் சேருவதே சாவதற்காகத்தான், இதில் என்ன ஸ்பெசல்  - உளறிய பீகார் அமைச்சர் பீம் சிங், மன்னிப்பு கேட்டார் முதல்வர் நித்திஷ்குமார்.

பீகார் அமைச்சரவையில் ஒரு கேபினட் அமைச்சராக உள்ளார் பீம் சிங், பாக்கிஸ்தானால் கொல்லப்பட்ட பீகார் ரெஜிமண்ட்டை சேர்ந்த 5 வீரர்களில் நால்வரின் இறுதி சடங்கு பீகாரில் நடந்தது, பாட்னாவில் வீரர்களின் உடல் தனி விமானத்தில் வந்த போது ஒரு அமைச்சர் கூட அங்கே இல்லை, மேலும் அமைச்சர்கள் வீரர்களின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாதது குறித்து கடும் விமர்சனம் எழுந்தது, இதற்கு பதில் அளிக்கிறேன் என்று உளறிய அமைச்சர் போம் சிங் இராணுவத்தில் வீரர்கள் சேருவதே சாவதற்காகத்தானே, அவர்களின் இறுதி சடங்கில் என்ன ஸ்பெசல் இருக்கிறது என்றார்.

தற்போது எதிர் கூடாரமாகிய பாஜக இதை கடுமையாக விமர்சித்துள்ளது, மேலும் பலரும் விமர்சித்த நிலையில் அமைச்சர் பீம் சிங்கின் கருத்துக்கு மன்னிப்பு கோரினார் முதல்வர் நிதிஷ்குமார்.

# அரசியல்வாதியாகனும்னா 2 வருசம் பார்டரில் காவலுக்கு நிற்க வேண்டும் என ரூல்ஸ் போடனும், அப்பொழுது தான் இவர்களின் திமிர் பேச்சு அடங்கும்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media