BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 8 August 2013

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சதிவேலையா?

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உட்பட பல பிரிவுகள் செயல் பட்டு வருகின்றன, அவற்றில் ஒன்றாக 500 மெகாவாட் திறன் கொண்ட பாவினி திட்டமும் ஒன்று.

பணியில் இருப்பவர் வேலை முடித்து திரும்பும் பொழுது ஒவ்வொரு பணியாளரும் வாயிற்காவலர்களால் பரிசோதிக்கபடுவது அங்கே இயல்பு, சில தினங்களுக்கு முன் சபீர் அலி என்பரிடம் நான் 5 பென் ட்ரைவ்களும், ஒரு டேடா கார்டும் இருப்பதை கண்டு அதை பறிமுதல் செய்து வைத்தனர்.

சில நாட்கள் கழித்து சபீர் அலி அதை திரும்ப கேட்க செல்லும் வரை அதை அவர்கள் பரிசோதிக்கவில்லை என தெரிகிறது, திரும்ப கேட்கும் பொழுது தான் பென் ட்ரைவை சோதித்திருக்கிறார்கள், அதில் பாவிணி திட்டம் முழுக்க படமெடுக்க பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த காவலாளிகள் அதை பாவிணி திட்ட குழு தலைவரிடம் தெரிவித்தனர், அது காவல்துறைக்கு அற்விக்கபட்டு சபீர் அலி கைது செய்யப்பட்டார், அவர் அந்த போட்டோக்களை எடுத்தது எதேனும் சதி வேலைக்காக இருக்குமோ, இதில் வேறெதும் அந்நிய சக்திகள் தொடர்புள்ளனவா என காவல் துறை விசாரித்து வருகிறது.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media