காரைக்காலை சேர்ந்த விநோதினி என்ற சாஃப்ட்வேர் இஞ்சினியர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார், அவரை ஒருதலையாக காதலித்து சுரேஷ் என்ற கட்டிடதொழிலாளி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார், அவரது காதலை ஏற்க மறுத்த விநோதினி மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி சுரேஷ் ஆசிட் ஊற்றினார்
பலத்த காயமடைந்த விநோதினி மதுரை மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார், அவரது உடல்நிலை மேலும் மோசமடையவே சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி சிகிச்ச பலனின்றி இறந்தார்
சுரேஷின் மீதான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது, இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி சுரேஷுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ஒரு லட்சரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்தார், மேலும் ஆசிட் விற்பனையில் அரசு சில கட்டுபாடுகளை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.