BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 20 August 2013

வாரிசுக்கு வேலை கட்டாயமில்லை

ராஸ்தான் மாநில வங்கியொன்றில் பணி புரிந்த ஊழியர் ஒருவர் உடல்நல குறைபாட்டால் மரணமடைந்தார், அவரது மகன் சக்கரவர்த்தி சிங் அந்த வங்கிக்கு கருணை அடிப்படையில் தமக்கு அந்த வேலையை வழங்க வேண்டும் என கடிதம் எழுதினார், அதை அந்த வங்கி நிராகரித்து விட்டது.

இதை தொடர்ந்து சக்கரவர்த்தி சிங் ராஜஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், ராஜஸ்தான் நீதிமன்றம் சக்கரவர்த்தி சிங்கிற்கு வேலை வழங்குமாறு தீர்ப்பளித்தது. அதனை தொடர்ந்து அந்த நீதிமன்றம் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணியில் இருக்கும் போது இறந்தவர் குடும்ப பிண்ணணி அறிந்தே வேலை கொடுப்பதா வேண்டாமா என தீர்மானிக்கும் உரிமை நிறுவனத்திற்கு உண்டு எனவும், பணிக்கு தேர்தெடுக்கப்படும் வாரிசிற்கு போதிய கல்வி தகுதி இல்லையென்றால் அவரது மனுவை நிராகரிக்கும் உரிமை நிறுவனத்திற்கு உண்டென்றும் தீர்ப்பு அளித்துள்ளது.

# வாரிசுக்கு பதவி அரசியலில் மட்டும் தான் போல


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media