BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 7 August 2013

தற்கொலையில் முதலிடம் - தமிழகம்

தேசிய குற்ற தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ள தகவலில் தமிழகத்தில் தான் தற்கொலைகள் அதிகமாக நடக்கின்றன என அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்தும், தொடர் விலைவாசி உயர்வாளும் மக்கள் பெரும் அவதிகுள்ளாகினர், மேலும் பலரை இது மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

தமிழக அரசு டாஸ்மாக் திறந்திருக்கும் நேரம் காலை பத்திலிருந்து இரவு பத்து வரை என்று அறிவித்திருந்தாலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலை ஆறு மணிக்கே பார் திறக்கப்பட்டு ப்ளாக்கில் சரக்கு விற்பனை அமோகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சம்பாரிக்கும் அம்பது, நூறையும் மக்கள் டாஸ்மாக்கிற்கே அழுது விடுவதால் அவர்களது குடும்பம் நடுத்தெருவிற்கு வரும் சூழ்நிலை உருவாகி பலர் குடும்பம், குடும்பமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகி வருகிறது

சமீபத்தில் ஒருவர் குடும்பத்துடன் அடையாற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார், சிலரது உதவியால் குழந்தைகள் உயிர் தப்பினாலும் குடும்பதலைவர் இறந்து விட்டார் என்பது அந்த குடும்பத்திற்கு பேரழிப்பு தான்.

மேலும் தொடர் குடியும் ஒரு மனநோய் தான் என்று பல மருத்துவர்கள் சொல்லி வருகிறார்கள், மதுக்கடைகளை மூடச்சொல்லி தமிழகத்தின் மதுரையில் உண்ணாவிரதம் இருந்த நந்தினி காவல்துறையினரால் கைது செய்யபட்டு பின் குடும்பத்தாரின் வற்புறுத்தல் காரணமாக உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.

வைகோ, டாக்டர் ராமதாஸ் போன்ற அரசியல் தலைவர்கள் தொடர்ந்து மதுகடைகளை மூடச்சொல்லி குரல் கொடுத்து வந்தாலும் அதை தமிழக அரசு காதில் போட்டுக்கொள்வதாக தெரியவில்லை.

# மொத்த தமிழகமும் சுடுகாடாகும் நாள் என்றோ! 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media