BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 31 August 2013

புதுடில்லி பேருந்து பாலியல் வன்புணர்வு வழக்கில் மைனர் குற்றவாளிக்கு இன்று தீர்ப்பு

புதுடில்லி பேருந்து பாலியல் வன்புணர்வு வழக்கில் மைனர் குற்றவாளிக்கு இன்று தீர்ப்பு

கடந்த டிசம்பர் மாதம் புதுடில்லியில் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் ஆறு பேர் கொண்ட கும்பலால் கூட்டு கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார், இதில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவன் 17 வயது கொண்ட மைனர், மற்ற 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் வைக்கப்பட்டபோது இந்த ஒருவன் மட்டும் சிறுவர் இல்லத்தில் வைக்கப்பட்டான்.

ஆறுபேரில் இவன் மீதான வழக்கு மட்டும் சிறுவர் கோர்ட்டில் மைனர் சட்டங்களுக்குட்பட்டு நடத்தப்பட்டது, இன்று அந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த 17 வயது மைனர் தான் அன்று அந்த பெண்ணிடம் மிக கொடூரமாக நடந்து கொண்டவன், அந்த பெண் நினைவோடு இருக்கும் போது ஒரு முறை கற்பழித்தவன் அந்தப்பெண் நினைவிழந்த நிலையிலும் ஒரு முறை கற்பழித்தான், ஆனால் இவன் 18 வயதுக்கு குறைந்த‌ மைனர் குற்றவாளி என்பதால் மூன்றாண்டுகள் வரை மட்டுமே தண்டனை கிடைக்கும் நிலை உள்ளது.

பிரிட்டனில் 10வயதுக்கு மேற்பட்டவர்கள் செய்யும் குற்றங்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் பல நாடுகளில் 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் செய்யும் கொலை, கற்பழிப்பு குற்றங்கள் பிற மேஜர் குற்றவாளிகளை போலவே சட்டம் தண்டனை வழங்கும், ஆனால் இந்தியாவில் சட்டம் 18 வயதுக்குட்பட்டவர்கள் செய்யும் கொடூர குற்றங்களை கூட மைனர் என்று கூறி குறைந்த அளவே தண்டனை வழங்கும்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media