BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 31 August 2013

சிரியா ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை கொன்றதற்கு ஆதாரம் உள்ளது - அமெரிக்கா



பஷீர் ஆசாத் தலைமையிலான சிரியா அரசாங்கம் தனது குடிமக்கள் மீதே ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி கொலை செய்துள்ளதற்கு விவரமான, தகுந்த ஆதாரங்கள் உள்ளன என்று அமெரிக்க அரசின் செயலாளர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.

கெர்ரி மேலும் தெரிவித்ததாவது சிரிய அரசு 1400 பேரை ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி கொன்றுள்ளதாகவும் அதில் 400 பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக இண்டெலிஜென்ஸ் ரிப்போர்ட் கூறியதை  அடுத்து போரில் குதித்தது, ஆனால் பேரழிவு ஆயுதங்கள் கிடைக்கவில்லை என்பதை குறித்து பேசிய ஜான் கெர்ரி ஈராக்கில் நடைபெற்றது போன்ற இண்டெலிஜென்ஸ் தவறு நடக்காதவாறு நாங்கள் இண்டெலிஜென்ஸ் ரிப்போர்ட்களை மிகவும் கவனமாகவும் எச்சரிகையாகவும் ஆராய்வதாக கூறினார்.

# ஏற்கனவே 1$க்கு 68ரூபாய் போய்விட்டது, சிரியாவோடு போரை ஆரம்பித்து கச்சா எண்ணென்ய் விலையை ஏற்றி 1$க்கு 100 ரூபாய் ஆக்கிவிடாதீர்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media