BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 3 August 2013

காரைக்கால் மீனவர்களை தாக்கிய இந்திய கடற்படையினர்

காரைக்கால் மீனவர்களை தாக்கிய இந்திய கடற்படையினர்

வழக்கமாக இலங்கை கடற்படை தான் தமிழக மீனவர்களை தாக்கும், நேற்று காரைக்கால் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலை சேர்ந்த 45 மீனவர்கள் நேற்று காலை 11 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். திருமலைராயன்பட்டினம் அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களைத் தாக்கியதாக தெரிகிறது. மேலும், துப்பாக்கி காட்டியும் மிரட்டி உள்ளனர். அதோடு, மீனவர்களின் வலையை இந்திய கடலோர காவல் படையினர் அறுத்து எறிந்துள்ளனர். 

# தமிழ் மீனவர்கள் என்றால் இலங்கை மட்டுமல்ல இந்திய கடற்படையும் தாக்குகிறதென்றால் தமிழர்கள் எல்லாம் இந்தியர்கள் இல்லையா?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media