BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 3 August 2013

பெரும் முதலாளிகளின் கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்யும் அரசு கல்விகடனை ஏன் தள்ளுபடி செய்ய கூடாது? திருமாவளவன் காட்டம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் அக்கடன் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை என்று பாரத ஸ்டேட் வங்கியினர் அம்மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரத் தட்டிகளில் அச்சிட்டு பொது இடங்களில் வைத்துள்ளது குறித்து விடுதலை சிறுத்தகைகள் தலைவர் வெளியிட்ட அறிக்கையில் இந்த செயல் மிகவும் அருவறுப்பானதும் கடும் கண்டனத்துக்குரியதுமாகும் என்றார்.

இது அம்மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் செயல் என்றவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது அரசு உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெரும் முதலாளிகள், கோடிக் கணக்கில் வங்கிகளுக்குத் திருப்பிச்செலுத்தாதபோது, அவற்றை வாராக்கடன்களாக அறிவித்து அவற்றை முழுமையாக அல்லது சலுகை அடிப்படையில் தள்ளுபடி செய்யும் இந்திய அரசு மாணவர்களின் கல்விக் கடன்களை ஏன் தள்ளுபடி செய்யக்கூடாது என்று கோரியுள்ளார்.

# சூப்பர் சார், நீங்கள் ஒருவராவது இது குறித்து கண்டனம் தெரிவித்தீரே!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media