அருந்ததியர் மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் போராடும் அமைப்பு ஆதித்தமிழர் பேரவை, இந்த பேரவையை சேர்ந்த தோழர் நீலவேந்தன் அவர்கள் அருந்ததியர்கள் உள் ஒதுக்கீட்டை 6% ஆக உயர்த்த கோரி இன்று தீக்குளித்து இறந்து போனார்.
தற்போது அருந்ததியர்கள் தலித் உள் ஒதுக்கீடு 3% ஆக உள்ளது, தமிழகத்தில் அருந்ததியர்கள் 6% ஆக உள்ளார்கள் எனவே இம்மக்களுக்கு 6% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வந்துள்ளது. ஆதித்தமிழர் பேரவை, இந்த பேரவையை சேர்ந்த தோழர் நீலவேந்தன் அவர்கள் அருந்ததியர் இன மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பல போராட்டங்களை மேற்கொண்டவர், நிறைந்த மன உறுதியை கொண்டவர், இவர் இந்த முடிவை எடுத்தது பல சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கையெழுத்திலான கடைசி கடிதத்தின் வாசகங்கள் கீழே.
தமிழீழ போராளி திலீபன் வாழ்க
தமிழக அரசே !
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை 6 % ஆக உயர்த்தி வழங்கு.. !
நீலவேந்தன் ,
ஆதித்தமிழர் பேரவை
26.09.13
1.10 AM
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.