BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 18 September 2013

7 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய 15 வயது சிறுவனின் இதயம்!

கடந்த வெள்ளியன்று மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமணையில் ஒரு 7 வயது சிறுவனுக்கு இதயத்தில் இடது புறம் இருந்த கட்டியை அகற்ற ஆபரேசன் நடைபெற்றுக்கொண்டிருந்தது.. எப்படியும் ஆபரேசன் முடிந்து தம் பையன் பிழைத்துவிடுவான்
என வேண்டிக்கொண்டிருந்த பெற்றோருக்கு அடுத்த பெரிய அதிர்ச்சி.. பயோப்சி ரிசல்ட் மூலமாக வந்திருக்கிறது. சாதாரண கட்டி என ஆபரேசன்செய்துகொண்டிருந்த டாக்டர்களும் அது கேன்சர் கட்டி என ரிசல்டை பார்த்து இனி கட்டியை அகற்றினால் மட்டும் போதாது.. இதயத்தையே மாற்றினால் தான் உயிர்பிழைக்க வாய்ப்பு என்ற நிலையை எட்ட..

அதே நேரத்தில் 10 கிமீ தொலைவில் ராமகிருஷ்ணா மருத்துவணையில் இன்னொரு 15 வயது சிறுவன் மூளையில் ஏற்பட்ட கட்டியால் மூளை மொத்தமாய் செயலிலந்து கோமோ நிலையில் லைப் சப்போர்டில் இருந்து கொண்டிருந்தான்.

இந்த சூழ்நிலையில் அவனது இதயத்தை தானமாய் தர பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள பரிசோதனைகளுக்குப்பின் அந்த 15 வயது சிறுவனின் இதயம் உடனடியாய் 7 வயது பையனுக்கு பொறுத்தப்ட்டு அவன் உயிர் காக்கப்பட்டிருக்கிறது.

தன் குழந்தையை இழக்கும் அந்த கொடூரமான தருணத்திலும் பொருப்புடன் சிந்தித்து இன்னொரு உயிரைக் காக்க முன்வரும் இது போன்ற பெற்றோர்கள் இன்னமும் மனிதாபிமானம் உயிருடன் இருப்பதற்கு சான்று.. அவர்களை வணங்கி, அவர்களின் மனநிம்மதிக்கு வேண்டுகிறோம்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media