BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 18 September 2013

தல போல வருமா! அஜீத் செய்த அந்த காரியம்

தன் சினிமா வாழ்வின் ஆரம்ப காலங்களில் தன்னம்பிக்கையா? தலைக்கணமா? என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வெளிப்படையான  பேட்டிகள் கொடுத்து சினிமா கிசு கிசுக்களில் வாய்க்கொழுப்பு நடிகர் என்று உருட்டப்பட்டவர் அஜீத், ஹூரா உட்பட பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டவர் நடிகை ஷாலினியை திருமணம் செய்து எல்லா கிசு கிசுக்களையும் செட்டில் செய்தவர், அதன் பின் சினிமாவில் கிசு கிசுக்களை கடந்து பெரும் வளர்ச்சி கண்டார்.

"நல்ல மனிதன்" என்ற பெயர் வாங்குவதுதான் மிக கடினமான விஷயம். தமிழ் சினிமாவில் "நல்ல மனிதன்" என்ற பெயரெடுத்தவர் அஜீத்.

தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் குமார் தனது செயல்பாடுகள் மூலம் ரசிகர்கள் மனதில் மேன்மேலும் உயர்ந்து வருகிறார்.

அஜீத்திடம் நீண்டகாலமாக சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை செய்யும் 10 ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று பிரியப்பட்ட அஜீத், கேளம்பாக்கத்தில் இடம் வாங்கி தன பணியாட்கள் பெயரில் பதிவு செய்து உள்ளார்.

இவர்களுக்கு தனது சொந்த செலவிலேயே வீடு கட்டித்தர முடிவு செய்த அஜீத், அதற்கான வேலைகளை ஆரம்பித்து உள்ளார். அதற்கான பூமி பூஜை நடந்து முடிந்துள்ளது. கட்டுமான வேலைகள் விரைவில் துவங்க உள்ளன.

ரஜினி தன்னிடம் வேலை பார்த்த 50 பணியாட்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு வீடு கட்டிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல விஷயம். இது போன்று பல உதவிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார் அஜித். நம் இறப்புக்கு வருந்துபவர்கள் எண்ணிக்கைதான் நாம் வாழ்ந்த வாழ்வின் அடையாளம் என்று நண்பர்களிடம் அடிக்கடி கூறுவாராம் அஜீத்.

அந்த வகையில் அஜீத் பல குடும்பங்களில் தெய்வமாக பூஜிக்கப்பட்டு வருகிறார் என்பதே நிதர்சனம். 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media