BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 18 September 2013

என்.ஆர்.ஐ க்கள் எங்களுக்கு பணம் தருகிறார்கள் - கட்சி தலைவர் அறிவிப்பு

நாங்கள் முழு மெஜாரிட்டியுடன் வெல்வோம், என்.ஆர்.ஐ க்கள் எங்களுக்கு பணம் தருகிறார்கள் - ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால்.
அர்விந்த் கேஜ்ரிவால் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து ஊழலுக்கு எதிராக போராட அன்னா ஹசாரேவுடன் இணைந்து பல போராட்டங்களில் கலந்து கொண்டார், அரசியல் கட்சியாக மாறுவதற்கு அன்னா ஹசாரே எதிர்ப்பு தெரிவித்ததால் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கினார், தற்போது ஷீலா தீட்சித்துக்கு தலை இடியாக டெல்லி தேர்தலில் களம் இறங்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சி, பல ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டிய கேஜ்ரிவால் இந்த தேர்தலில் 9 எம்.எல்.ஏ இடங்களை வெல்வார்கள் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.

இது குறித்து நேற்று ஒரு டிவிக்கு பேட்டியளித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் தங்களிடம் பணம் இல்லை ஆனால் மக்கள் செல்வாக்கு உள்ளது என்று கூறிய அவர் எங்களுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் நன்கொடை வழங்குகிறார்கள், அவர்கள் இந்தியாவில் மாற்றம் வரவேண்டும் என விரும்புகிறார்கள் என்றார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media