BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 18 September 2013

செக்ஸ் புகார் தி.மு.க. மாவட்ட செயலாளர் கானா தலைமறைவு

நெல்லை மாவட்ட தி.மு.க மாவட்ட செயலாளராக இருப்பவர் கருப்பசாமி பாண்டியன், இவரை தி.மு.க வில் சேர விருப்பம் தெரிவித்து மொழிப்போர் தியாகி குறளேருழவரின் பேத்தி நா.தமிழரசி சந்தித்து பேசினார்.



கடந்த 28.8.2013 அன்று கருப்பசாமி பாண்டியனின் உதவியாளர் கார்த்திக் தமிழரசிக்கு போன் செய்து மாவட்ட செயலாளர் சந்திக்க விரும்புவதாகவும், அவரை குற்றலாத்தில் உள்ள பங்களாவில் சந்திக்க வருமாறும் கூறியுள்ளார்.

அங்கு சென்ற தமிழரசியிடம் மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியனின் தவறாக நடக்க முயற்சித்தோடு மட்டுமல்லாமல், இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்

அதனை தொடர்ந்து தமிழரசி நேற்று நெல்லை மாவட்ட டி.ஐ.ஜி சுமித் சரணிடம் புகார் அளித்தார், புகாரை பெற்று கொண்ட டி.ஐ.ஜி. சுமித் சரண் உடனடியாக இதுகுறித்து விசாரிக்க தென்காசி காவல்துறைக்கு உத்துரவிட்டார், கருப்பசாமி பாண்டியன் மற்றும் கார்த்திக்குன் மேல் வழக்கு பதிவு செய்த காவல்துறை அவர்களை கைது செய்ய அவர்களது இல்லத்திற்கு விரைந்தது.

அப்பொழுது அவர்களுக்கு கருப்பசாமி பாண்டியனும், கார்த்திக்கும் கேரளா சென்றிருப்பதாக தகவல் சொல்லப்பட்டிருக்குறது, அவர்களை கைது செய்ய கேரளா விரைந்த காவல்துறையினர் அவர்கள் அங்கும் இல்லையென்றும், எங்குள்ளார்கள் என்ற தகவலும் யாருக்கும் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

வழக்கை எதிர்கொள்ளாமல் அவர்கள் இருப்பது தலைமறைவாக உள்ளனரே என்ற சந்தேகத்தை கிளப்புகிறது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media