BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 9 September 2013

வாடகைகாரில் சொந்த கதை பேசியதால் ஏற்பட்ட அபாயம், மதுரவாயல் இரட்டை பெண்கள் கொலை துப்பு துலங்கியது

விமலாதேவி(47) மற்றும் அவரது மகள் பவித்ரா(22) என்ற இருவரும் நாகேந்திரா தெருவில் அவர்கள் வீட்டில் சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டு கிடந்தனர், அவர்களின் 15 பவுன் நகையும் காணவில்லை, 

இதைத்தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கிய போலிசார் நகைக்காக கொலை செய்த ரமேஷ்(24), சதீஷ்(23) ஆகிய இரண்டு கார் டிரைவர்களை கைது செய்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட விமலாதேவி அறிமுகம் அல்லாதவர்களை வீட்டினுள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கமாட்டாராம், அவரது வீட்டில் கிரில் கேட் எப்போதும் பூட்டியே இருக்குமாம், தெரியாதவர்கள் பேசினால் வீட்டினுள் பூட்டிய கிரில் கேட்டுக்கு பின் இருந்து தான் பேசுவாராம், இந்த தகவல் அறிந்த போலிசார் இந்த கொலையை செய்தவர்கள் அறிமுகமானவர்கள் என்று உணர்ந்து விசாரணையை அந்த கோணத்தில் நகர்த்தினார்கள், அவர்கள் வீட்டின் அருகில் உள்ள ஏடிஎம் கேமராவை பரிசோதித்ததில் இந்த இருவரும் கொலை நடந்த நேரத்தில் பைக்கில் சென்றிருக்கிறார்கள்.

ஒரு மாதத்திற்கு முன் அந்த ஏரியாவில் உள்ள கார் டிரைவர் ரமேஷ்ஷின் காரை வாடகைக்கு அமர்த்தி கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்கள், அந்த நேரத்தில் குடும்பத்தினுள் மகள் பவித்ராவுக்கு செய்து வரும் திருமண ஏற்பாடுகள் குறித்து பேசிக்கொண்டிருந்தனர், இதை கேட்டுக்கொண்டிருந்த கார் டிரைவர் ரமேஷ் தன் கடன்களை அடைக்கவும் மேலும் புதிய கார் வாங்கவும் சதீஷ் உடன் சேர்ந்து கொண்டு விமலாதேவி வீட்டிற்கு சென்றுள்ளான், இவர்கள் அறிமுகம் ஆனவர்கள் என்பதால் வீட்டினுள் அனுமதித்து அவர்களுக்கு டீ தந்துள்ளார், அந்நேரம் அந்த பெண்ணை தாக்கி கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துள்ளனர், பிபிஓவில் இரவு டியூட்டி முடித்துவிட்டு உறங்கி கொண்டிருந்த பவித்ராவையும் கொலை செய்துள்ளனர், பின் நகைகளுடன் தப்பி ஓடிவிட்டனர்.

# வாடகை காரில் சொந்த கதை பேசாதீர்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media