BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 2 September 2013

தெலுகு சுயமரியாதை யாத்திரை நடத்தும் சந்திரபாபு நாயுடு.

தெலுங்கானா பிரிக்கும் முடிவை எதிர்த்து தெலுகு சுயமரியாதை யாத்திரை நடத்தும் சந்திரபாபு நாயுடு.

ஒரு காலத்தில் ஆந்திராவின் அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்த சந்திரபாபு நாயுடு தற்போது ஏற்பட்டுள்ள தெலுங்கானா பிரிப்பினால் மேலும் வலுவிழந்து டம்மி பீஸ் ஆகி கிடக்கிறார். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரியசமிதி, ஜெகன்மோகன் ரெட்டி, சிரஞ்சீவி என அனைவரும் வலிமயாக வலம் வர வலுகுறைந்து எதை வைத்து அரசியல் செய்வது என தெரியாமல் சுற்றுகிறார் சந்திரபாபு நாயுடு.

தெலுங்கானா மாநில பிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா பிரிப்பில் காங்கிரஸ் அரசியல் செய்வதாக கூறிய சந்திரபாபு நாயுடு. ராயலசீமா மற்றும் கடலோர பகுதிகளை உள்ளடக்கிய 13 மாவட்டங்களுக்கும் பேருந்தின் மூலம் தெலுகு சுயமரியாதை யாத்திரை நடத்த முடிவு செய்துள்ளார் சந்திரபாபு நாயுடு.

மேலும் கூறிய நாயுடு தனது ஆட்சிகாலத்தில் தெலுங்கானா-சீமாந்திர பகுதி மக்கள் ராமன் - இலட்சுமணன் போல ஒற்றுமையாக இருந்ததாகவும் காங்கிரஸ் கட்சி தெலுங்கு பேசும் மக்களிடையே பிரிவினையை உருவாக்கியதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media