BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 26 October 2013

குஜராத்தில் ஒரே மேடையில் பேசப்போகும் மோடி - மன்மோகன் சிங்.

அமெரிக்காவில் ஒரே மேடையில் இரண்டு அதிபர் வேட்பாளர்களும் வாதங்களும் பிரச்சாரங்களும் செய்து கொள்வார்கள்,
இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் அந்த மாதிரியான நல்ல பழக்க வழக்கங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒரே மேடையில் ஏறப்போகிறார்கள்

அக்டோபர் 29ம் தேதி குஜராத்தின் அகதமாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு சொசைட்டி சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட அருங்காட்சியக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் தலைமை விருந்தினராக பிரதமர் மன்மோகன்சிங்கும், சிறப்பு விருந்தினராக நரேந்திர மோடியும் பங்கேற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செயல்படாத பிரதமர் என மன்மோகனை வறுத்தெடுக்கும் மோடியும், மதவெறியர் என விமர்சிக்கப்படும் மோடியும் நேருக்கு நேர் சந்திக்க இருக்கும் காட்சி எப்படி இருக்கப்போகிறதோ!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media