வரும் ஞாயிறு அன்று பாட்னாவில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பேரணி நடைபெற உள்ளது,
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று பாட்னாவில் பல இடங்களில் நரேந்திர மோடியின் பேனர்கள் போஸ்டர்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சாலை மறியல் நடத்தினர்.
நீக்கப்பட்ட பேனர்கள், போஸ்டர்கள் எல்லாம் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டவை என்றும் அதனால் தான் நீக்கினோம் என்றும் பாட்னா மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
பாஜகவின் நீண்ட கால கூட்டாளியாக இருந்த நித்திஷ்குமார் மோடியை பிரதமர் வேட்பாளர் ஆக்குவதை எதிர்த்து கூட்டணியிலிருந்து விலகி மோடியை கடுமையாக குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
# பேனர் கட்டுவதை கூட முறையான அனுமதி இன்றி கட்டுபவர்கள் தான் நாட்டில் ஊழல் அற்ற ஆட்சி தருவார்களாம். நம்பங்கள்! நம்பங்கள்!!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.