BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 23 October 2013

பொறுமையை சோதிக்கும் பாகிஸ்தான்-பதிலடி தருமா இந்திய அரசு????

பொறுமையை சோதிக்கும் பாகிஸ்தான்-பதிலடி தருமா இந்திய அரசு?????

முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களாகவே
பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அடிக்கடி அத்துமீறி வருகிறது.இந்திய ராணுவம் அவ்வப்பொழுது சின்ன சின்னதாய் பதிலடி கொடுத்தாலும்கூட,ஒரு பலமான ராணுவ நடவடிக்கையை எடுக்க ஏனோ மத்திய அரசு தயங்கி வருகிறது.இந்நிலையில் எல்லையில் நிலவும் பதட்டத்தை தணிக்க ஒருநாள் பயணமாக உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே செவ்வாய் அன்று காஷ்மீர் சென்றார்.எல்லைபகுதிகளை அவர் பார்வையிட்டு திரும்பிய சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்திய நேரப்படி செவ்வாய் இரவு 7.40 மணிக்கு தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய் அன்று நடந்துள்ள இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.முன்னதாக செவ்வாய் காலை 10.30 மணி அளவில் முதல் தாக்குதல் நிகழ்ந்தது.

#மன்மோகன் அய்யா,நீங்களும் உங்க கூட்டாளிங்களும் இன்னும் எத்தன நாளைக்குத்தான் இப்பிடி மிக்சர் சாப்பிட்டுக்கிட்டே இருக்கபோறீங்க?????

->N


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media