BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 23 October 2013

நான் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவில்லை, அரசியல் பேசவே இல்லை - விஜய் மறுப்பு

நான் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவில்லை, அரசியல் பேசவே இல்லை - விஜய் மறுப்பு

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியலில் இறங்குவது குறித்து நடிகர் விஜய் கருத்து கேட்டதாக சில நாட்களுக்கு முன் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இது குறித்து மறுத்து தெரிவித்து அறிக்கை விடுத்த விஜய் அதில் குறிப்பிட்டதாவது

சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் சம்மந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது. இதை படித்து ரசிகர்களும், பொதுமக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள்.

நான், கடந்த இரண்டு மாதமாக ஹைதராபாத்தில் ஜில்லா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறேன். கேரளாவிற்கே நான் செல்லவில்லை. அப்படியிருக்க இப்படியொரு தவறான செய்தியால் ரசிகர்கள் மட்டுமின்றி நானும் குழப்பம் அடைந்தேன். நான் இப்போது வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு பகலாக உழைத்து வருகிறேன்.

எனது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருப்பது பத்திரிகை நண்பர்கள்தான். ஆகவே தயவு செய்து உண்மை இல்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கும், மக்களுக்கும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

# ஏன் ப்ரோ, அரசியல் பேசித்தான் பாருங்களேன்!



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media