BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 30 October 2013

இரட்டை இலையும், உதயசூரியனும் - அரசு காசில் வெறித்தனமாக விளம்பரம் செய்யும் அதிமுக, திமுக‌


திமுக அரசு கொண்டு வந்த காப்பீட்டு திட்டத்திற்கு "கலைஞர் காப்பீட்டு திட்டம்" என்று பெயர் சூட்டினார்கள், "கலைஞர் வீட்டு வசதி திட்டம்" என்ற ஒரு திட்டம், கலைஞர் என்ற பெயரில் இன்னும் பல திட்டங்களை கொண்டு வந்தார்கள் திமுக ஆட்சியில், பொங்கலுக்கு அளிக்கப்பட்ட பையில் உதயசூரியன் சின்னத்தை வரைந்து வைத்திருந்தார்கள், இதை விமர்சித்த போது சூரியன் இல்லாமல் பொங்கலா என்றார்கள், பொங்கலுக்கு வரையப்படும் படங்களில் முழு சூரியன் வரைவதே வழக்கம், உதயசூரியன் வரைவது வழக்கமல்ல.

ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக ஆட்சி வந்தது, உடனடியாக எல்லா திட்டங்களும் "அம்மா" என்று ஆரம்பிக்கப்படுகின்றன, அம்மா கிராமவளர்ச்சி திட்டம், அம்மா மலிவு விலை சிற்றுண்டி உணவகம், அம்மா குடிநீர் திட்டம் என எல்லாம் அம்மா மயம், அது மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் இரட்டை இலை சின்னத்தை பொறித்துள்ளார்கள்.

இவர்கள் ஆரம்பிக்கும் திட்டம் எதுவும் அவர்களின் சொந்த காசிலோ அல்லது அவர்களின் கட்சி காசிலோ அல்ல, அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் அரசின் சார்பில் ஆரம்பிக்கப்படும் திட்டங்கள், இதில் தொடர்ந்து இவர்களின் பட்டப்பெயர்களையும் இவர்கள் கட்சி சின்னத்தையும் விளம்பரப்படுத்துவது இவர்களின் விளம்பர வெறியை காண்பிக்கின்றது.

ஸ்மால் பஸ்களில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டிருக்கிறது என்று திமுக எதிர்ப்பு தெரிவிப்பதும், பொங்கல் பைகளில் உதயசூரியன் வரைந்துள்ளது என அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததும் மக்களை மறதியாளர்கள் என்று நினைத்து தானோ?

# அனைத்திற்கும் தங்கள் பெயரை சூட்டிக்கொண்டவர்கள் கலைஞர் டாஸ்மாக் என்றோ, அம்மா டாஸ்மாக் என்றோ ஏன் பெயர் வைக்கவில்லை?



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media