BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 30 October 2013

சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி இளம்பெண்கள் அரைநிர்வாண போராட்டம் [video]

சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி இளம்பெண்கள் அரைநிர்வாண போராட்டம்

 உலகிலேயே பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள ஒரே நாடு சவுதி அரேபியா. சில நாட்களுக்கு முன் தடையை மீறி கார் ஓட்டியதற்காக 10 சவுதி அரேபிய பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடையை நீக்கும்படியும் நேற்று பெண்ணிய அமைப்பைச் சேர்ந்த நான்கு இளம்பெண்கள் பெர்லினில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன்பு கூடினர்.

பெண்களை கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோஷங்கள் இட்டபடியே தூதரகம் அருகில் வந்த அவர்கள் திடீரென தங்கள் மேலாடையை நீக்கி, அரைநிர்வாணமாக ஆக்ரோஷ கோஷங்கள் இட்டனர். அவர்க‌ளுடைய உடலில் பெண்களுக்கு எதிரான தடைகளை தகர்க்கும்படியான கோஷங்கள் பெயிண்ட்டில் எழுதப்பட்டிருந்தது. சவுதி அரேபிய தூதரகம்  முன்பு சிறிதுநேரம் கோஷங்கள் போட்டபின் அவர்கள் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media