ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து அழித்துக்கொண்டிருந்த ராஜபக்சே அரசுக்கு காங்கிரசின் தலைமை துணை போய் ஆயுதங்கள் உட்பட
அனைத்து உதவிகளையும் செய்தது, விடுதலைப்புலிகள் அமைப்பே அழிக்கப்பட்டு 40,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு உரிமை இழந்து இலங்கையில் அடிமைகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ்க்கு எதிராக பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்ற போக்கு எழுந்துள்ளது, ஆனால் பாஜகவும் ஈழத்தமிழர்கள் விசயத்தில் ஆதரவாக இருந்ததில்லை என்பது தான் உண்மை, அடுத்த ஆட்சி ஒரு வேளை பாஜக வந்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே மூலம் பாஜகவுடன் நெருங்குகிறார் ராஜபக்சே, சிவசேனா தலைவர் பால் தாக்கரே புலிகளை தீவிரமாக ஆதரித்தவர் ஆனால் அவரது கட்சியின் தற்போதைய தலைவர் உத்தவ்தாக்கரே ராஜபக்சேயுடன் நெருக்கம் காட்டுகிறார், மேலும் ராஜபக்சேவுக்கு சந்திரபாபு நாயுடு உடனும் தொடர்புகள் உள்ளன.
இந்துக்களுக்கான அமைப்பாக சொல்லப்படும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சிவசேனாவுக்கு நெருக்கமான பத்திரிக்கையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா தொடர்ந்து ராஜபக்சேவை பாராட்டி கட்டுரைகளை எழுதி தள்ளுகிறார், இலங்கையில் தமிழர்கள் உண்மையில் இந்துக்களே என்றாலும் இந்துக்களை கொன்ற ராஜபக்சேவை பாராட்டு எழுதி தள்ளுகிறார் தீவிர இந்து ஆதரவு கட்சிகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள்.
இலங்கை குறித்து பாஜகவின் நிலை என்ன?
ராஜபக்சே மீதான போர் குற்றம் தொடர்பாக பாஜகவின் நிலை என்ன?
ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டம் குறித்து பாஜக வின் நிலைப்பாடு என்ன?
இலங்கையில் ஈழத்தமிழர்கள் சம உரிமை பெற பாஜக என்ன செய்யப்போகிறது?
இந்த கேள்விகளுக்கெல்லாம் பாஜக தன் நிலைப்பாட்டை விளக்க வேண்டும், அப்போது தான் காங்கிரசுக்கு எதிராக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பாஜக செயல்படுமா என்று தெரிய வரும், இது குறித்து பாஜக நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க பாஜகவை நெருக்க வேண்டும், இல்லையென்றால் தமிழர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.
# காங்கிரஸூம், பாஜகவும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.