BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 1 October 2013

குற்றவழக்கில் தண்டனை, எம்பி பதவியழக்கும் முதல் எம்பி காங்கிரஸ்காரர்




முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அமைச்சரவையில் சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்த மசூத், மருத்துவக் கல்லூரிகளில் தகுதியில்லாதவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இவர் தற்போது காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

அந்த முறைகேடு வழக்கில், ரஷீத் மசூதுக்கு 4 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்து, டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

ஓய்வு பெற்ற அதிகாரிகள் இருவருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 9 மாணவர்களுக்கு தலா ஓர் ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தண்டனை பெற்றதால், மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூத் பதவி பறிக்கப்படலாம். 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media