திட்டமிட்டு கைது செய்யப்பட்ட தேவயானி..
பணிப்பெண் குடும்பம் அமெரிக்காவிற்கு ரகசிய பயணம்..
பணிப்பெண்ணை பகடைக்காயாக பயன்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்.
தூதரக அதிகாரி தேவயானி கைது வழக்கில் அமெரிக்க அதிகாரிகள் பணிப்பெண்ணை பகடைக்காயாக பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது, பணிப்பெண் சங்கீதாவிற்கு விசா விண்ணப்பத்தில் குறிப்பிட்ட ஊதியமான 4000 டாலர்க்கு பதில் 573$ மட்டுமே ஊதியம் வழங்கியதாக விசா மோசடி செய்ததாக தூதரக அதிகாரி தேவயானி கோபகர் கைது செய்யப்பட்டார். மன்ஹாட்டனில் நடு ரோட்டில் கைது செய்யப்பட்டு விலங்கிடப்பட்ட அவர் ஆடைகள் களைந்து சோதனை செய்யப்பட்டார்.
பணிப்பெண் சங்கீதாவை முன்பே ஒரு வழக்கிற்காக இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்காவை கேட்டிருந்தது. அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை மேலும் சங்கீதா தங்களுடைய வழக்குக்கு உதவ வேண்டும் என்பதற்காக சங்கீதா கேட்டு கொண்டபடி, அவரது கணவர் பிலிப் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு ரகசியமாக விசா வழங்கி, நியூயார்க்குக்கு அமெரிக்க அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
சங்கீதாவின் குடும்பத்தினர் அமெரிக்கா வந்த பின்னர்தான் அவர் மன்ஹாட்டன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்து அது தான் தேவயானி கைது வரை சென்றுள்ளது. இதன் மூலம் பணிப்பெண் சங்கீதாவை பகடைக்காயக பயன்படுத்தி அமெரிக்க அதிகாரிகள் தேவயானி கோபர்கரை திட்டமிட்டு கைது செய்து அவமானப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
பணிப்பெண் குடும்பம் அமெரிக்காவிற்கு ரகசிய பயணம்..
பணிப்பெண்ணை பகடைக்காயாக பயன்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்.
தூதரக அதிகாரி தேவயானி கைது வழக்கில் அமெரிக்க அதிகாரிகள் பணிப்பெண்ணை பகடைக்காயாக பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது, பணிப்பெண் சங்கீதாவிற்கு விசா விண்ணப்பத்தில் குறிப்பிட்ட ஊதியமான 4000 டாலர்க்கு பதில் 573$ மட்டுமே ஊதியம் வழங்கியதாக விசா மோசடி செய்ததாக தூதரக அதிகாரி தேவயானி கோபகர் கைது செய்யப்பட்டார். மன்ஹாட்டனில் நடு ரோட்டில் கைது செய்யப்பட்டு விலங்கிடப்பட்ட அவர் ஆடைகள் களைந்து சோதனை செய்யப்பட்டார்.
பணிப்பெண் சங்கீதாவை முன்பே ஒரு வழக்கிற்காக இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்காவை கேட்டிருந்தது. அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை மேலும் சங்கீதா தங்களுடைய வழக்குக்கு உதவ வேண்டும் என்பதற்காக சங்கீதா கேட்டு கொண்டபடி, அவரது கணவர் பிலிப் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு ரகசியமாக விசா வழங்கி, நியூயார்க்குக்கு அமெரிக்க அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
சங்கீதாவின் குடும்பத்தினர் அமெரிக்கா வந்த பின்னர்தான் அவர் மன்ஹாட்டன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்து அது தான் தேவயானி கைது வரை சென்றுள்ளது. இதன் மூலம் பணிப்பெண் சங்கீதாவை பகடைக்காயக பயன்படுத்தி அமெரிக்க அதிகாரிகள் தேவயானி கோபர்கரை திட்டமிட்டு கைது செய்து அவமானப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.