டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே இசைக்கச்சேரிகள் களை கட்டுகிறதோ இல்லையோ, இலக்கிய கச்சேரி களைகட்டி விடும். புத்தக கண்காட்சியை குறிவைத்து எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் இயங்கும், தங்கள் புத்தகங்களை விளம்பரப்படுத்தவும் எழுத்தாளர்களை ப்ரமோட் செய்யவும் இலக்கிய சர்ச்சை என்னும் அடிதடி நடைபெறுவது வாடிக்கையான ஒன்று.
இந்த ஆண்டும் இப்படியான ஒரு இலக்கிய சர்ச்சை நடந்துகொண்டுள்ளது, ஆனால் இதில் எல்லாம் சிக்காமல் நிசப்தம்.காம் வா.மணிகண்டன் அவர்களின் புத்தகம் ஒன்று ஆரம்பத்திலேயே அசத்தியுள்ளது.
நிசப்தம்.காம் தளத்தில் வா.மணிகண்டன் தொடர்ந்து சிறப்பாக எழுதி வருபவர், அசத்தலான, நேர்மையான எழுத்துக்கு சொந்தக்காரர்.
முன்பொருமுறை பிரபல எழுத்தாளர் ஒருவர் தனது புத்தகத்தின் முதல் காப்பியை ஏலம் விட்டிருந்தார். வா.மணிகண்டன் நகைச்சுவையாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய புத்தகத்தின் முதல் காப்பியை ஏலம் விட்டு 5 ரூபாயிலிருந்து ஏலம் ஆரம்பம் என்று கூறியிருந்தார்.
"லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்" என்ற அவரின் புத்தகம் அச்சிலிருந்து வெளிவராத நிலையில், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வாசகர் அந்த புத்தகத்தின் முதல் காப்பியை 5000 ரூபாய்க்கு ஏலம் எடுத்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார், இரண்டாவது காப்பியை வேறொரு வாசகர் 2000 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார், மேலும் ஆன்லைனில் இந்த புத்தகத்தை 12 பேர் ஆர்டர் செய்துள்ளார்கள். வளர்ந்து வரும் எழுத்தாளர் ஒருவரின் புத்தகம் ஒன்று இன்னும் அச்சிலிருந்தே வெளிவராதா புத்தகம் ஏலத்தில் எடுத்திருப்பதும் அதை பலரும் முன்பதிவு செய்வதும் தமிழ் இலக்கிய உலகில் நடக்காத ஆச்சரியம், இது வா.மணிகண்டன் மீது பலத்தை எதிர்பார்ப்பையும் அவரது "லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்" என்ற புத்தகத்தின் மீது ஆர்வத்தையும் இலக்கிய உலகில் கூட்டியுள்ளது.
"லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்" விலை ரூ.80 , புத்தகத்தை ஆன் லைனில் வாங்க இந்த லிங்கை அழுத்தவும் http://goo.gl/4SbKz0
# வாழ்த்துகள் வா.மணிகண்டன்
வா.மணிகண்டனின் ஃபேஸ்புக் பக்கம்
https://www.facebook.com/vaa.manikandan
வா.மணிகண்டனின் இணையதளம்
http://www.nisaptham.com/
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.