BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 26 December 2013

குஜராத் கலவரம் குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.




நரேந்திர மோடி ஆட்சிகாலத்தில் கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில் பல முஸ்லீம்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர், பல முஸ்லீம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். அகமதாபாத்தில் குல்பர்க் சொசைட்டி என்ற பகுதியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி மற்றும் 68 முஸ்லீம்கள் வெட்டியும் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர்.

மோடியின் தூண்டுதலின் பேரில் தான் இந்தப் படுகொலை நடந்தது என ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டு இந்த கொலைகளுக்கும் மோடிக்கும் தொடர்பில்லை என்று கூறி வழக்கிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டார். இதை எதிர்த்து ஜாகியா அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், குறிப்பாக இந்த சிறப்பு புலனாய்வு குழு சரியாக வழக்கை விசாரிக்கவில்லை என்று கூறி வழக்கு தொடர்ந்திருந்தார், ஆனால் நீதிபதிகள் சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் அதன் அடிப்படையில் மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

வழக்கே சிறப்பு புலணாய்வு குழுவின் விசாரணை சரியில்லை என்பது குறித்து தான், ஆனால் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media