BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 13 January 2014

ஜனதா தர்பாரில் பார்க்க முடியாத கேஜ்ரிவாலை சந்திக்க அவரின் வீட்டின் முன்பு குவிந்த மக்கள்

சனிக்கிழமையன்று டெல்லி முதல்வரை சந்திக்க வந்து, முடியாமல் ஏமாற்றம் அடைந்து திரும்பி போன மக்கள், ஞாயிற்றுகிழமையன்று, அவரது வீட்டின் முன்பு அதிகாலையிலேயே வந்து குவிந்தனர்.

அதில் முகேஷ் யாதவ் என்பவர், மின்சார துறையில், கான்ட்ராக்ட் வேலையில் இருந்ததாகவும், திடீரென்று ஒரு நாள், முன் அறிவிப்பு இல்லாமல் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதாகவும், கூறியிருந்தார். அவரை போன்று, டெல்லியில் உள்ள போக்குவரத்து துறை, மெட்ரோ ரைல், அரசு பள்ளிகள் என பல துறைகளில் கான்ட்ராக்ட் வேலையில் உள்ள பலரும், தங்கள் வேலைகளை நிரந்தரம் செய்ய சொல்லி, கேஜ்ரிவால் வீட்டின் முன்பு காத்திருந்தனர். பத்து வருடங்கள் பணி புரிந்தாலும், தங்கள் வேலைகள் நிரந்தரம் செய்யப்படவில்லை என புகார் அளிக்க சிலர் வந்திருந்தனர்.

கான்டிராக்ட் அடிப்படையில் வேலை என்ற வழக்கத்தை மாற்றுவதாக வாக்குறுதி அளித்த கேஜ்ரிவால் மீது டெல்லி மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media