BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 13 January 2014

சிறை கைதிகளை யோகா, தியானம் செய்ய வைத்த முன்னாள் போலீஸ் அதிகாரி

சதீஷ் குமார் டாக்ரா என்கிறவர் 1982ம் பேட்சை சேர்ந்த‌ ஐ.பி.எஸ் அதிகாரி. இவர் தமிழக சிறைகளில், பல மாற்றங்களை கொண்டு வந்திருப்பவர். டிசம்பர் 31 அன்று, காவல்துறை (சிறைகளுக்கான) துணை இயக்குநராக ஓய்வு பெற்றார்.

2011ஆம் ஆண்டு ஆரம்பித்து, சிறை கைதிகளுக்கு, பல தியான முறைகள், மற்றும் யோகா பயிற்சிகள் அளித்து இருக்கிறார். கைதிகளை குழுக்களில் திரட்டி, ஒவ்வொரு குழுவிலும் 300 பேர் என, அவர்களுக்கு, தியான பயிற்சி கொடுத்து இருக்கிறார். இதையடுத்து, கைதிகள், சதீஷ் குமாரை, அதிகாரி போல் பார்ப்பதை நிறுத்தி, ஒரு ஆன்மிக குரு போல் பார்க்க ஆரம்பித்தனர். அவரிடம், தனிமையில், தான் செய்த தவறுகள் மற்றும் குற்றங்களை பற்றி பகிர்ந்து, வருத்தம் தெரிவித்தனர்.

கைதிகளுக்கு, பயிற்சி வகுப்புகள் எடுக்க ஜெயில் வார்டன்களையும் தயார் செய்தார், சதீஷ் குமார். மிக விரைவில், வார்டன்களும், மிகுந்த அக்கறையுடனும், ஆர்வத்துடனும், செயல் பட்டு, கைதிகளுக்கு, உடல் பயிற்சி வகுப்புகளும் எடுத்து வந்தனர்.

தியானம் செய்ய ஆரம்பித்த பின், கைதிகளிடம், நல்ல மாற்றங்கள் இருந்ததாகவும், அவர்களிடம் இருந்த ஆக்கிரமிப்பு குணங்கள் குறைந்ததாகவும், தங்கள் மனதிற்கு சாந்தி அளித்ததால், தாங்களாகவே, கைதிகள் முன்வந்து தியானம் செய்தனர் எனவும் சதீஷ் குமார் கூறுகிறார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media