BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 13 January 2014

மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கட்ட்க் மார்கெட்டில் இருந்த பெண்

ஊடக துறையில் வேலை பார்க்கும் ஒருவரும், இன்னும் சில பேரும், ஒடிஷா மாநிலத்தில் உள்ள கட்டக் மாவட்டத்தில், மார்கெட்டில் ஒரு பெண் அழுது கொண்டே அலைந்து கொண்டிருப்பதை பார்த்து, அவரிடம் சென்று விசாரித்தனர்.

விசாரித்ததில், அந்த பெண் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண், சில பிரச்சனைகள் காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி ரயில் ஏறி இருக்கிறார், கட்டக் ரயில் நிலையத்தில் இறங்கிய போது, உதவுவதாக கூறி நான்கு பேர் அழைத்து சென்று, அவரை கற்பழித்து, அவரை ப்ளாட்பாரத்தில் தூக்கி எறிந்து விட்டு சென்று இருக்கின்றனர் என்று தெரிய வந்தது. அவரது, கைகள் மற்றும் கால்களில் காயங்கள் இருந்தது.

இதையடுத்து, அப்பெண்ணை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, புகார் பதிவு செய்தனர். இதைப்பற்றி போலீஸார் பேசுகையில், "அந்த பெண், மனநிலை பாதிக்கப் பட்டிருக்கிறார், நடந்த்து என்னவென்று விவரமாக சொல்ல கூட முடியவில்லை. அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை." என்று தெரிவித்தனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media