BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 31 January 2014

அழகிரியின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்க முடியாது


தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி தனது 63வது பிறந்தநாளை நேற்று மிகச் சிறப்பாக கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "எனது பிறந்தநாள் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட மதுரை மாவட்ட திமுகவினர் 10 பேரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். கலைக்கப்பட்ட மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் திமுக ஏற்றால், சமரசத்திற்கு உடன் படுவேன்." என்று கூறினார்.

இதைப் பற்றி கருணாநிதியிடம் கேட்ட போது, "திமுகவில் உள்ளவர்கள், திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் போன்றவர்களைப் பற்றி அபாண்டமாக பி.சி.ஆர். (தீண்டாமை வன்கொடுமை) குற்றச்சாட்டை போலீஸாரிடம் சொல்லி, அவர்கள் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த பிறகு, கட்சி அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. " என்று அவர் பதிலளித்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media