BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 31 January 2014

பிப்ரவரி 2ம் தேதி நடக்கும் மாநாட்டில் கூட்டணியை அறிவிக்கிறார் விஜயகாந்த்

நாளை மறுநாள்  உளுந்தூர்பேட்டையில் நடக்கவிருக்கும் தே.மு.தி.க மாநாட்டில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து நிச்சயம் அறிவிக்கப்படும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க மாநாட்டிற்கு 'ஊழல் எதிர்ப்பு மாநாடு' என, பெயரிடப்பட்டுள்ளது.  மாநாட்டிற்கு காவல்துறையினரின் அனுமதி கிடைத்துவிட்டதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார். அம்மாநாட்டின் முடிவில், தொண்டர்களின் கருத்துகளை முழுமையாக அறிந்து, தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவை வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், 'தங்களுடன் விஜயகாந்த் கூட்டணி அமைப்பது உறுதி' என, பா.ஜ.க நிர்வாகிகள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடக்கவிருக்கும் மாநாட்டிலேயே விஜயகாந்த், தன் முடிவை அறிவிக்க மாட்டார் என்றும், சென்னை திரும்பியதும், மாநில நிர்வாகிகள், செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே, கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media