BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 31 January 2014

எனக்கு தெரியாது..எனக்கு தெரியாது..எனக்கு தெரியாது: கருணாநிதி

                             

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, "கருணாநிதியும், அவர் மகனும் நாடகம் நடத்துகின்றனர். அவர்களது வீட்டிற்குள் பேச வேண்டிய விஷயங்களை, ஊடகங்களின் முன்பு பேசுகின்றனர். அவர்கள் நடத்தும் எந்த நாடகத்திற்கும், தேமுதிக அடிபணியாது." என்று கூறினார்.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் நேற்று இரவு நிருபர்களுக்கு கருணாநிதி பேட்டி அளித்தார். அப்பொழுது பிரேமலதா கருத்து பற்றி கேட்ட போது, "அவருக்குத் தெரிந்த அளவுக்கு நாடகம் பற்றி எனக்குத் தெரியாது. " என்று பதில் அளித்தார். மேலும், திமுக, தேமுதிக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை எந்த நிலையிலே இருக்கிறது என்பதும் தெரியாது என்று கூறினார்.

ஜெயலலிதா மீது இவ்வளவு வழக்குகள் இருக்கும்போது, அவர் பிரதமராக வரவேண்டும் என்பது பற்றிய அவரின் கருத்து கேட்ட போது, பிரதமர் ஆவதற்கு இப்படிப்பட்ட வழக்குகள் இடையூறாக இருக்குமா என்றால், எனக்கு அதைப் பற்றிய சட்ட நுணுக்கங்கள் தெரியாது என்று கருணாநிதி பதிலளித்தார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media