BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 25 January 2014

பொருளாளர் பதவியில் இருந்து கொண்டு ஏன் கட்சி தலைவர் போல் ஸ்டாலின் செயல்பட வேண்டும்?

தி.மு.க வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசும் போது, கருணாநிதியை தவிர வேறு யாரையும், கட்சி தலைவராக கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் கூறியதாவது:
மு.க. ஸ்டாலின் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர். அவரை ஒரு போதும் தலைவராக ஏற்க முடியாது. தி.மு.க வில் தலைவரும், பொது செயலாளரும், ஸ்டாலின் சொல்வதை தான் கேட்கிறார்கள். ஸ்டாலினுக்கு கட்சியில் பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் பொருளாளர் போல் செயல் படாமல், கட்சி தலைவர் போல் செயல் படுகிறார். மீண்டும் கட்சி தலைவரை சந்திக்க திட்டம் எதுவும் இல்லை. நான் எந்த தவறும் செய்யாத நிலையில் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் எந்த விளக்க கடிதமும் கட்சிக்கு அனுப்ப போவதில்லை.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media