BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 25 January 2014

இந்திய அரசியல் அமைப்பு, முதல் அமைச்சர் தர்ணா செய்வதற்கு தடை விதிக்கவில்லை



இந்திய அரசியல் அமைப்பு, முதல் அமைச்சர் தர்ணா செய்வதற்கு தடை விதிக்கவில்லை என்று டெல்லி முதல் அமைச்சர் கேஜ்ரிவால் கூறுகிறார். 

 கேஜ்ரிவால், ரயில் பவனில் நடத்திய தர்ணாவிற்காக பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார்.  அவர் மீது, டெல்லி போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியது. உச்ச நீதிமன்றம், விதிக்கப்பட்ட 144 தடையை மீறி, சட்ட விரோதமாக கேஜ்ரிவால் மற்றும் அவர் ஆதரவாளர்கள் கூடி தர்ணா நடத்தியதை சாடி உள்ளது. இதைப் பற்றி பேசும் போது கேஜ்ரிவால், "நான் இந்திய அரசியல் அமைப்பை படித்தேன். அதில், முதல் அமைச்சர் தர்ணா நடத்த கூடாது என்று எங்கும் இல்லை." என்று கூறினார். மேலும், "எங்களது ஆம் ஆத்மி கட்சியை பற்றி தவறாக எழுதுவதற்கும், மக்களிடயே எங்களது புகழை கெடுப்பதற்கும், ஊடகங்கள் பணம் வாங்குகின்றனர். " என்றும் அவர் கூறினார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media