BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 25 January 2014

மோடியை டீ விற்கச் சொல்லும் அய்யர், சோனியா காந்தியை அவர் முன்பு செய்த ஓட்டல் பணியாளர் வேலையை செய்ய சொல்வாரா?

மணி சங்கர் அய்யர், தனது பேச்சை கட்டுப் படுத்தாவிட்டால், பா.ஜ.க வினரின் நேரடி தாக்குதலுக்கு ஆளாக கூடும் என்று பாஜக துணை தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். மோடியை தேநீர் விற்க சொல்லும் அய்யர், சோனியாவை, அவர் முன்பு இங்கிலாந்தில் ஓட்டல் பணியாளராக செய்த பணியை திரும்ப செய்ய சொல்வாரா? எனவும் அவர் கேட்டார்.

மேலும், சந்திப்பில் அவர் கூறியதாவது:

சோனியா காந்தி, 1965ம் ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள ஒரு கிரேக்க ஓட்டலில், பண தேவைகளுக்காக, பணியாளராக பணிபுரிந்தார். அவரை ஏன் அந்த பணியாளர் வேலையை செய்ய அய்யர் சொல்லவில்லை என்று ராஜா கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், காங்கிரஸ் பத்து ஆண்டுகளாக நடத்திய ஆட்சியினால், இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றன. மோடிக்கு பொருளாதாரம் தெரியவில்லை என்று கூறுவது தவறு. அவர் ஆட்சி செய்யும் குஜராத்தை, சீனாவுடன் தான் ஒப்பிட வேண்டும் என்று உலக நாடுகளே ஒப்பு கொண்டுள்ளன.

திறமையான பிரதமர் இருந்திருந்தால் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்யாது.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media