BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 9 January 2014

டியூடியில நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்டு..ஸ்ட்ரிக்டு..ஸ்ட்ரிக்டு..

தேவயாணி கோப்ரகேட் விவகாரத்திற்கு பிறகு, அமெரிக்காவிற்கு, தன் எதிர்ப்பை தெரிவித்து, நெருக்கடி கொடுக்கும் வகையிலாக நடந்து வரும் இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை: ஜனவரி 16 தேதிக்குள், டெல்லியில் இருக்கும், அமெரிக்க தூதகரத்தின் க்ளப்பு ஒன்றை மூட வேண்டும். இந்த க்ளப்பில் உள்ள ரெஸ்டாரண்டுகள், கஃபேக்கள், பார்கள், நீச்சல் குளம், டென்னிஸ் மற்றும் கால் பந்து விளையாடும் வசதிகள் என அனைத்தையும் இனிமேல் பயன் படுத்த முடியாது. மேலும், அமெரிக்க தூதகரத்தில் பணி புரியும் எந்த அதிகாரிகளின் வாகங்கள், போக்குவரத்து விதிகளை மீறினால், விதிவிலக்கு ஏதும் இல்லாமல், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்தியா எச்சரித்துள்ளது.

இத்தனை கெடுபிடிகள் நடந்து கொண்டிருந்தாலும், ஜனவரி 13 அன்று நடக்கவிருக்கும்,தேவயாணி வழக்கு விசாரணயை ஒரு மாதம் ஒத்தி வைக்குமாறு கேட்டு கொண்டு தேவயாணியின் வழக்கறிஞர் தாக்கல் செய்த‌ மனு நிராகரிக்கப் பட்டுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media