பெருங்குடி, திருவள்ளுவர் நகர், சந்தியாநகர், அம்பேத்கார் நகர் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அதனால், வேளச்சேரி, கிண்டி, பெருங்குடி மக்கள் நல சங்க கூட்டமைப்பினர் அடிப்படை வசதி செய்து தரக்கோரி சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இன்று காலை பெண்கள் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் வேளச்சேரி சுடுகாட்டில் குடியேற ஊர்வலமாக கோஷமிட்டபடி புறப்பட்டனர். சுடுகாடு அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தடுப்பை மீறி செல்ல முயன்ற, கூட்டமைப்பு தலைவர் லிங்கபெருமாள் உள்பட 50 பேரை கைது செய்தனர். அவர்கள் அருகில் உள்ள சமூதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.