BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 24 March 2014

காதல் திருமணம் செய்த மகளை ஏமாற்றி கழுத்தை நெரித்து கொன்ற பெற்றோர்


ஐதராபாத்தில் உள்ள பிரபல நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தீர்த்தி, தன்னுடன் வேலை பார்த்த கிரண்குமார் என்பவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கிரண்குமார் தனது பெற்றோருடன் பலமுறை பேசி தீர்த்தியை திருமணம் செய்ய சம்மதம் பெற்றார். ஆனால் தீர்த்தி வீட்டில் இறுதிவரை சம்மதிக்கவில்லை என்றாலும், இருவரும் திருமணம் செய்து கொண்டன‌ர். இது தீர்த்தி பெற்றோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனை காட்டிக் கொள்ளாமல் மகளையும், மருமகனையும் விருந்துக்கு அழைத்தனர். பெற்றோர் மனம் திருந்தி விட்டார்கள் என தீர்த்தியும், கிரண் குமாரும் நம்பினர்.

"இரவு நேரம் என்பதால் நீங்கள் இப்போது வீட்டுக்கு வரவேண்டாம் தீர்த்தியை மட்டும் நாங்கள் அழைத்துச் செல்கிறோம். நீங்கள் லாட்ஜில் தங்கி விட்டு மறுநாள் காலை நல்ல நேரம் பார்த்து விருந்திற்கு வாருங்கள்’’ என்று தீர்த்தியின் பெற்றோர் கூறினர். இதை நம்பி மனைவியை அவர்களுடன் அனுப்பிவிட்டு கிரண்குமார் நண்பர்களுடன் லாட்ஜில் தங்கினார்.

மறுநாள் தீர்த்தியின் பெற்றோர்கள் வீட்டை பூட்டி விட்டு அவசரமாக தெருக் கோடியில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்த போது, தீர்த்தி கட்டிலில் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து துப்பட்டாவால் நெரிக்கப்பட்டு இருந்தது.  தீர்த்தியை அவரது பெற்றோரே கழுத்தை நெரித்து கொன்றது தெரிய வந்தது. அவரது பெற்றோரை பிடிக்க முயன்ற போது அவர்கள் தப்பி விட்டனர்.

இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media