திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை சத்திய மூர்த்தி பவனில் கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ்.ஞான தேசிகனுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
சொன்ன வாக்குறுதிகளை கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது.
திமுகவுக்கு காங்கிரஸ் எந்த துரோகமும் செய்யவில்லை. மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழி எம்.பி.யாவதற்கு காங்கிரஸ் ஆதரவளித்தது. அப்போதெல்லாம் நன்றியுள்ள கட்சியாக இருந்த காங்கிரஸ் இப்போது மட்டும் திமுகவுக்கு நன்றிகெட்ட கட்சியாகிவிட்டதா? தமிழகத்தில் மைனாரிட்டி யாக இருந்த திமுகவுக்கு 5 ஆண்டுக ளாக எந்தப் பதவியும் பெறாமல் முழுமையாக ஆதரவு கொடுத்து அவர்களது ஆட்சியைக் காப்பாற்றியதே காங்கிரஸ்தான்.
இப்போது நன்றி மறந்த காங்கிரஸ் என்று திமுக தலைவர் சொல்கிறார். நன்றி மறந்தவர்கள் யார் என்பதை தேர்தல் முடிவு சொல்லும் என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.