BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 28 March 2014

மோடியை புகழ்ந்தும், ராகுல் காந்திக்கு வறுமை என்றாலே என்ன என தெரியாது எனக் கூறும் காங்கிரஸ் தலைவர்


ராஜஸ்தான் மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் ராமநாராயண மீனா இன்று நரேந்திர மோடியையும், ராகுல் காந்தியையும் பற்றி பேசியதாவது:

பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி அவரது திறமைகளால் அடிமட்டத்தில் இருந்து மிகவும் உயர்வான இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவருக்கு வறுமையின் வேதனை தெரியும்.

மேலும் பா.ஜ.க. நரேந்திர மோடியை மட்டுமே மையப்படுத்தி தேர்தலை சந்திக்கிறது. அவரது இடது பாக்கெட்டுக்குள் அம்பானி மற்றும் அடானி ஆகியோர் உள்ளனர். வலது பாக்கெட்டில் பா.ஜனதா உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அவருக்குப் பின்னால் நிற்கிறது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு வறுமையைப் பற்றி தெரியாது. வறுமையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு அவருக்கு சிறந்த குழு தேவை. மைனாரிட்டி பிரிவினர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சென்று கொண்டிருக்கின்றனர். இந்த விஷயம் கட்சிக்கு பெரும் கவலையை அளிக்கிறது.

இவ்வாறு ராமநாராயண மீனா பேசியிருந்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media