BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 28 March 2014

மதுரை விமான நிலையத்தில் மு.க.அழகிரி - ப.சிதம்பரம் சந்திப்பு


திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, நேற்று தனது தங்கை கனிமொழியை,  அவரது சி.ஐ.டி காலனி இல்லத்தில் சந்தித்து இருந்தார். அந்த‌ 40 நிமிட சந்திப்பின் போது, தாங்கள் இருவரும் பேசியதை, கனிமொழி அவரது தந்தை கருணாநிதியிடம் பிறகு தெரிவித்தார்.

இன்று மதுரை விமான நிலையத்தில் மு.க.அழகிரியும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் சந்தித்துக் கொண்டனர். சென்னையில் இருந்து மதுரை சென்ற விமானத்தில் அழகிரியும் - சிதம்பரமும் ஒன்றாகவும் பயணித்தனர். மதுரை விமான நிலையம் வந்தடைந்தவுடன், விமான நிலையத்தின் வரவேற்பு அறையில் இருவரும் சிறிது நேரம் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 9 ஆண்டுகள் அங்கம் வகித்திருக்கிறோம். அந்த வகையில் பொதுவான விஷயங்கள் குறித்து பேசினோம் என்று அவர் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media