BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 1 April 2014

பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் மீது கற்கள், செருப்பு வீச்சு

பீகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த அம்மாநில முதல் அமைச்சர்  நிதிஷ்குமார் கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நிதிஷ் குமார் பிரச்சாரத்தில் பேசி கொண்டிருந்த போது, மாநில அரசு மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்று கூறி அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்கள் சிலர் நிதிஷ்குமார் மீது கற்களை சரமாரியாக வீசினார்கள். ஆனால் கற்கள் எதுவும் முதல் அமைச்சர் மீது படவில்லை.

பின்னர் குஷ்ருபுர் என்ற இடத்தில் ஹெலிகாப்டரில் ஏறச் சென்றபோது, நிதிஷ் குமார் மீது செருப்பு வீசப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media