BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 1 April 2014

வாஜ்பாய் சிறந்த நிர்வாகி; பிரதமராக இன்னொரு வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்தால், நதிநீர் இணைப்பை செயல்படுத்தியிருப்பார்- அத்வானி

பாஜக மூத்த தலைவர் அத்வானி மக்களவை தேர்தலுக்கான தனது முதல் பிரச்சாரத்தை மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் நேற்று துவக்கினார். அப்பொழுது அவர், "தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வெற்றி கண்டவர் நரேந்திர மோடி மட்டுமல்ல. சத்தீஸ்கரின் ராமன் சிங்கும், மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகானும் தொடர்ந்து மும்முறை வெற்றி பெற்றுள்ளனர். எனவே மோடி மூவரில் ஒருவர் தான். " என்று கூறிய அவர், 1990-களில் தான் மேற்கொண்ட ரதயாத்திரையில் மோடி தன்னுடன் இணைந்து செயல்பட்டதாக நினைவு கூர்ந்தார்.

வாஜ்பாயின் நிர்வாகத் திறனை புகழ்ந்து பேசிய அத்வானி, பிரதமராக இருக்க இன்னொரு வாய்ப்பு வாஜ்பாய்க்கு கிடைத்திருக்குமானால், அவர் நிச்சயம் நதிநீர் இணைப்பை செயல்படுத்தியிருப்பார் என்று கூறினார் அத்வானி.

பாஜக ஆட்சியில் மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அத்வானி, தெலங்கானா அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள், குளறுபடிகள் போல் ஏதும் ஏற்படவில்லை என்றார். மேலும் பாஜக ஆட்சியில் பணவீக்கம் எப்போதும் கட்டுக்குள் இருந்தது என்றார்.

மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமையும் என்று கூறியதோடு, அவரது ஆட்சி இந்தியாவை மாற்றி அமைக்கும் என்று அத்வானி தெரிவித்து இருந்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media