உத்தர பிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. அங்கு முக்கிய தலைவர்கள் போட்டியிடுவதால் அவர்களுடைய பிரச்சார கூட்டங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது போலீசார் மிக தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தில் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்று புலனாய்வு துறையினருக்கு ஏற்கனவே தகவல் கிடைத்து உள்ளது.
உத்தரபிரதேசத்தில் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில், குழந்தைகள் 'ரிமோட்' மூலம் பறக்க விடும் பொம்மை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அந்த மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுபற்றி அந்த மாநில மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இதுபற்றி அந்த மாநில மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தீவிரவாதிகள் வான் வழியாக தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் செயல்படும் பொம்மை ஹெலிகாப்டர்கள், பொம்மை விமானங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக எங்களுக்கு எச்சரிக்கை தகவல் வந்து உள்ளது. இவற்றின் மூலம் கூட்டத்தில் தாக்குதல் நடத்துவது மிகவும் எளிது ஆகும்.
உத்தரபிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பொம்மை கடைகளிலும் சோதனை நடத்துமாறு எங்களுக்கு உத்தரவு வந்து உள்ளது. அதன்படி, பொம்மை ஹெலிகாப்டர்கள், பொம்மை விமானங்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் அடையாள அட்டை மற்றும் அவர்களை பற்றிய விவரங்களை கேட்டு பெறுமாறு கடைக்காரர்களை கேட்டுக் கொள்ள இருக்கிறோம். காசியாபாத்திலும் டெல்லியிலும் உள்ள பொம்மை விற்பனை கடைகளில் தற்போது நாங்கள் சோதனை நடத்தி வருகிறோம், டெல்லியிலும் சோதனை நடத்த இருக்கிறோம்.
மேலும் உத்தரபிரதேச மாநிலத்திற்குள் பொம்மை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் கொண்டு வரப்படுகின்றதா? என்பதை கண்டறிய எல்லைகளை தீவிர சோதனை நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு உத்தர பிரதேச மாநில போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில், குழந்தைகள் 'ரிமோட்' மூலம் பறக்க விடும் பொம்மை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அந்த மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுபற்றி அந்த மாநில மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இதுபற்றி அந்த மாநில மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தீவிரவாதிகள் வான் வழியாக தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் செயல்படும் பொம்மை ஹெலிகாப்டர்கள், பொம்மை விமானங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக எங்களுக்கு எச்சரிக்கை தகவல் வந்து உள்ளது. இவற்றின் மூலம் கூட்டத்தில் தாக்குதல் நடத்துவது மிகவும் எளிது ஆகும்.
உத்தரபிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பொம்மை கடைகளிலும் சோதனை நடத்துமாறு எங்களுக்கு உத்தரவு வந்து உள்ளது. அதன்படி, பொம்மை ஹெலிகாப்டர்கள், பொம்மை விமானங்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் அடையாள அட்டை மற்றும் அவர்களை பற்றிய விவரங்களை கேட்டு பெறுமாறு கடைக்காரர்களை கேட்டுக் கொள்ள இருக்கிறோம். காசியாபாத்திலும் டெல்லியிலும் உள்ள பொம்மை விற்பனை கடைகளில் தற்போது நாங்கள் சோதனை நடத்தி வருகிறோம், டெல்லியிலும் சோதனை நடத்த இருக்கிறோம்.
மேலும் உத்தரபிரதேச மாநிலத்திற்குள் பொம்மை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் கொண்டு வரப்படுகின்றதா? என்பதை கண்டறிய எல்லைகளை தீவிர சோதனை நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு உத்தர பிரதேச மாநில போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.