மதுரை மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர் சிதம்பரம் தான் வான்வழியாகவே பயணிப்பதை குறித்து விமர்சனம் செய்ததற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
மேலும் அவர் பேசுகையில், ‘வான் வழியாகச் செல்பவர்களுக்கு மண்ணில் நடப்பது தெரிய வாய்ப்பில்லை என எண்ணை விமர்சனம் செய்திருக்கிறார் சிதம்பரம். அவருக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். 1982 முதல் நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். கடந்த 32 ஆண்டுகளாக தமிழகத்தில் எனது கால்படாத இடமே இல்லை என்னும் அளவுக்குப் பட்டி, தொட்டியெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். மாதக்கணக்கில் பிரச்சாரம் செய்திருக்கிறேன்.
சிதம்பரத்துக்கு வாக்குகேட்டு அவருக்காகக் கூடப் பிரச்சாரம் செய்திருக்கிறேன். நான் பிரச்சாரம் செய்யும்போது சிதம்பரம் திறந்த ஜீப்பில் பின்னால் வந்தார். தற்போது குறைந்த காலத்தில் அனைத்து தொகுதிக்கும் செல்ல வேண்டும் என்ற அடிப்படையிலும், சாலை வழியாகச் சென்றால் காவலர் பணிச்சுமை கூடும் என்பதைக் கருத்தில் கொண்டும்தான் வான்வழியாகச் சென்று கொண்டிருக்கிறேன்.
எனக்குள்ள அச்சுறுத்தல் குறித்து சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது 27.3.2009 அன்று கடிதம் எழுதியிருந்தார். அதில் என்ன குறிப்பிட்டார் என்பதையும் அதற்கு நான் என்ன பதில் எழுதினேன் என்பதையும் சிதம்பரம் படித்துப் பார்க்க வேண்டும். விரக்தியில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ .
இவ்வாறு ஜெயலலிதா பேசியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.