BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 31 March 2014

நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள பெரும்பாலான பெண்கள் மோசமாகவே நடந்து கொண்டுள்ளார்கள்-சல்மா

 
கவிஞர் சல்மாவுக்கு இந்த ஆண்டுக்கான இலக்கியப் பெண் எழுத்தாளருக்கான பெமினாவின் ’வுமன் ஆப் வொர்த் ’ என்ற விருது, சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல செய்தித்தாள் ஒன்றிற்கு, திமுக மகளிரணி பிரச்சாரக் குழுச் செயலாளரும், பிரபல பெண் கவிஞருமான சல்மா பேட்டியளித்து இருந்தார்.  

ஒரு பெண் பிரதமராக வந்தால் வரவேற்பீர்களா? என்ற கேள்விக்கு, "நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வருவது ஆணா, பெண்ணா? என்பது முக்கியமல்ல. நல்ல நிர்வாகம் தெரிந்தவராக இருக்க வேண்டும். பொதுவாக நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள பெரும்பாலான பெண்கள் மோசமாகவே நடந்து கொண்டுள்ளார்கள் என்பதுதான் வரலாறு. இலங்கையின் சந்திரிகா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, தமிழகத்தின் ஜெயலலிதா என அனைவருமே மோசமாக நடந்து கொண்டதுதான் வரலாறாக உள்ளது. பெண் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதற்காகக் கெட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. " என்று பரப்பரப்பாக பேசியுள்ளார்.

மேலும், அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டது கட்சியை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும், அவருக்கு மக்கள் மத்தியிலோ, தொண்டர்கள் மத்தியிலோ செல்வாக்கு இல்லை என்பது தலைமைக்கு தெரிந்ததனால் தான் தயக்கமின்றி அவர் நீக்கப்பட்டிருக்கிறார், அழகிரியின் செல்வாக்கு என்னவென்று இந்தத் தேர்தலுக்குப் பிறகு தெரிந்து விடும் என்றும் சல்மா கூறியுள்ளார்.

தென் மாவட்டங்களில், நெருக்கடி காலத்தில் கட்சியை வளர்த்தவர் அழகிரி, அவரை புறக்கணிப்பது சரியா என்று கேட்டபோது, திமுகவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து வகையிலும் பணியாற்றி, கட்சியை வளர்த்தவர் தளபதிதான் (ஸ்டாலின்). எனவே அவருக்குதான் செல்வாக்கு உள்ளது என்று பதிலளித்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media