கறுப்புப் பணம் பதுக்கிய இந்தியர்களின் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசிடம் தான் (சிதம்பரம்) கோரியதாகவும், ஆனால் அந்த நாடு, அப்பட்டியலை அளிக்க மறுத்துவிட்டதாகவும் சிதம்பரம் தற்போது நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொண்டுள்ளார். இது குறித்து சிதம்பரம் கூறுகையில், கடந்த 2009ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து வெளியுறவு துறையிடம் கறுப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை கேட்டு கடிதம் எழுதியதாகவும், அதனை ஏற்றுக் கொள்ளாத சுவிட்சர்லாந்து, இந்தியர்களின் பட்டியலை வெளியிட மறுத்ததோடு, இந்தியாவின் இரட்டை வரி விதிப்பு முறையை தங்கள் நாடு ஏற்றுக் கொள்ளவில்லை என்று சுவிட்சர்லாந்து பதில் அளித்ததாக கூறினார்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில், சுவிட்சர்லாந்தின் பொது நிதி கொள்கை நிலைப்பாட்டை மாற்றி கருப்புப் பண விவகாரத்தை வெளிக்கொண்டுவர வற்புறுத்தப் போவதாக ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.